இம்ரான்கான் விஷம் வைத்து கொல்லப்படலாம்?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு, ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தனது சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், இம்ரான் கானுக்கு உணவில் விஷம் வைத்து கொல்லப்படலாம் என்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பஞ்சாப் மாநிலத்தின் உள்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

தனது கணவரின் பாதுகாப்பு குறித்து கவலை அடைந்துள்ளதாவும், அட்டாக் சிறையில் அவருக்கு விஷம் கொடுக்கப்படலாம் என்றும் எனது கணவரை எந்த நியாயமும் இல்லாமல் அட்டாக் சிறையில் அடைத்துள்ளனர் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இம்ரான் கானை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதனால் சட்டப்படி அவரை அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவரின் சமூக மற்றும் அரசியல் அந்தஸ்துக்கு ஏற்றாற்போல் சிறையில் பி-கிளாஸ் வசதிகளை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

கடந்த காலங்களில் இம்ரான்கான் மீது இரண்டு தடவைகள் கொலை முயற்சி நடந்துள்ளதனால், அவரது உயிருக்கு இன்னமும் ஆபத்து இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்கூறியுள்ளார்.

அட்டாக் சிறையில் தனது கணவரிற்கு விஷம் கொடுத்து கொல்லப்படக்கூடிய வாய்ப்பு இருக்கும் அச்சம் உள்ளதனால், வீட்டில் சமைத்த உணவை சிறையில் அவர் சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டுள்ளார்.

அவருக்கு 48 மணி நேரத்துக்குள் அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருந்த போதிலும் இன்னமும் வசதிகள் வழங்கப்படவில்லை என்றும்.

சிறை விதிகளின்படி அவருக்கு தனியார் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள உரிமை உண்டு என்பதனால் அவருக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்காதது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *