இராமாயண சர்ச்சை – புதிய புரளியை கிளப்பும் உதய கம்மன்பில

தொழில்நுட்பத்தில் நாங்கள் எந்தளவு முன்னேற்றத்தில் இருந்துள்ளோம் என்பதை இராவணனின் புஷ்பக விமானம் எடுத்து காட்டியுள்ளது. இராவணனை நாங்கள் வணங்குகின்றோம்.

இராவணன் என்பவர் மருத்துவம், ஜோதிடம் விளையாட்டு உள்ளிட்ட 10 விடயங்களில் தலை சிறந்தவராக இருந்த காரணத்தினாலேயே அவரை நாங்கள் பத்து தலை இராவணன் என்று அழைக்கின்றோம்.

இராமாயணத்தை எமது எதிரிகளின் கதை என்றே கூறலாம். எல்லா கதைகளிலும் மூன்று கதைகள் இருக்கும் நண்பர்கள் கதை, எதிரிகள் கதை,இரண்டுக்கும் நடுவில் உள்ள உண்மையான கதை என இருக்கும். இதன்படி இராமாயணம் எதிரிகளின் கதையாக உள்ளது. எனினும் உண்மை கதை வேறு எனவும் தெரிவித்தார்.

நமது வரலாற்றில் பழங்குடியில் கண்டெடுக்கப்பட்ட எமது மனித வாழ்க்கை வரலாறுகள் 44 ஆயிரம் வருடங்கள் பழமையானது.

இது தொடர்பாக முறையான ஆய்வுகளை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *