ஆகஸ்ட் 9 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது!
எதிர்வரும் 9ம் திகதி பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் எதிர்வரும் 12ம் திகதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை கெளரவித்து அளிக்கப்பட்ட விருந்தில் கலந்து கொண்ட பிரதமர் ஷபாஸ் ஷெரிப் எதிர்வரும் 9ம் திகதி பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார்.
நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து முழுமையாக விவாதித்த பிறகு, இந்த முடிவை அறிவிப்பதாக கூறினார்.இந்த நிகழ்ச்சியில் தற்காலிக பிரதமர் மற்றும் காபந்து அரசு உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் எதிர்கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, தற்காலிக பிரதமரின் பெயரை அதிபரிடம் சமர்ப்பிப்பதாக ஷபாஸ் ஷெரிப் அறிவித்துள்ளார்.பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 90 நாட்களுக்குள் மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்படும். அதுவரை அந்த நாட்டில் காபந்து அரசு ஆட்சி செய்யும்.