முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கிழக்கின் ஆளுநர் செந்திலுடன் அவசர சந்திப்பு.
கிழக்கு மாகாணத்தில் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சமகால பிரச்சினைகள் மற்றும் தற்போது எழுந்துள்ள ஏறாவூர் நகர சபைப்பிரிவில் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பிலான அவசர சந்திப்பொன்று கொழும்பில் உள்ள ஆளுநரின் வாசஸ்தலத்தில் இன்று (25) இடம்பெற்றது.
இச்சந்திப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சியின் பிரதி தலைவர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.