மீண்டும் பலவீனமான நாணய அலகாக பதிவானது இலங்கை ரூபா!
மீண்டும் ஆசியாவின் பலவீனமான நாணய அலகாக மாற்றமடைந்துள்ளதாக Bloomberg செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
இலங்கை ரூபாவானது ஆசியாவின் சிறந்த நாணய அலகாகப் பதிவாகி மூன்று வாரங்களுக்குள் மீண்டும் பலவீனமான நாணய அலகாக மாற்றமடைந்துள்ளது.
வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டமை மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமை ஆகியவற்றின் காரணமாக டொலருக்கான கேள்வி உயர்வடைந்தமையே இதற்கான காரணமாக அமைந்துள்ளதாக குறித்த செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.
டொலரின் இன்றைய விற்பனை பெறுமதி 336 ரூபா 16 சதம் வரை உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.