இலங்கையில் ஐந்து பேரில் ஒருவர் வாகனத்தை இறக்குமதி செய்துள்ளதாக அறிவிப்பு!

கடந்த ஐந்து வருடங்களில் நாட்டின் சனத்தொகையில் ஐவரில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வாகனத்தை இறக்குமதி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இவற்றில் 75 வீத வாகனங்கள் வங்கிக் கடனில் பெறப்பட்டவை என்றார்.

வாகன இறக்குமதிக்கான வரியை டொலரில் செலுத்துவது தொடர்பான பிரேரணையை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

2015 முதல் 2020 வரை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2,498,714 ஆகும்” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

2015 இல் – 652,446 வாகனங்கள்

2016 இல் 466,986 வாகனங்கள்

2017 இல் 448,320 வாகனங்கள்

2018 இல் 496,282 வாகனங்கள்

2019 இல் 332,452 வாகனங்கள்

2020 இல் 102,228 வாகனங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *