காதல் தோல்வியால் குடிக்கு அடிமையான நயன்தாரா!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா காதல் தோல்வியால் குடிக்கு அடமையாகியிருந்தாகவும் அவரை ஒருவர் திருத்தி நல்வழிப்படுத்தியதாகவும் புரளியைக் கிளப்பி வருகிறார் சர்ச்சை நாயகன் பயில்வான் ரங்கநாதன்.
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன்தாரா, நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் நடிகையாகவும் இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா நாளடைவில் டாப் நடிகையாக மாறிவிட்டார்.
மேலும், சிம்பு மற்றும் நயன்தாரா முதலில் காதல் உறவில் இருந்து வந்தனர், பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
இதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவாவை காதலித்து வந்தார். பிறகு காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து சினிமாவில் மாத்திரம் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா.
2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு கடந்த ஆண்டு திருமணமும் செய்துக் கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்திருந்தார்.
நயனை திருத்திய கணவன்
இந்நிலையில் நயன் பற்றி வீடியோ ஒன்றில் பயில்வான் புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். அதாவது நயன்தாராவும் சிம்புவும் காதலித்தது அனைவருக்கும் தெரிந்தது தான்.
ஆனால் சிம்புவை கருத்து வேறுபாடால் பிரிந்து விட்டார். அதனால் மனமுடைந்துப்போய் மதுப்பழக்கத்திற்கும் புகைத்தல் பழக்கத்திற்கும் அடிமையாகி பப்புகளுக்கு சென்றிருக்கிறார்.
அதற்குப் பிறகு கொஞ்ச காலம் போக அடுத்து பிரபு தேவாவைக் காதலித்து அதுவும் வெற்றியளிக்காத நிலையில் தான் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த போது தான் விக்னேஸ் சிவனுடன் காதல் மலர்ந்தது.
அப்போது இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்த போதும் நயன்தாராவால் குடியை விட முடியவில்லை ஆனால் விக்னேஸ் சிவன் தான் நயன்தாராவை திருத்தியிருக்கிறார்.