தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு 1500 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கை தேங்காய் பாலினால் 1500 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தேங்காய் பாலுக்கு வெளிநாட்டு சந்தையில் அதிக கேள்வி காணப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் மாத்திரம் 40,000 மெற்றிக் டன் தேங்காய்ப்பால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பணிப்பாளர் சரத் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

அதன் மூலம் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் தேங்காய் பாலுக்கு அதிக கேள்வி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *