எலான் மஸ்க் ட்வீட்; உலகின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இலங்கை கோபுரம்
இலங்கையின் கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுற்றுலா பயணி ஒருவர் அம்புலுவாவ கோபுரம் தொடர்பில் தமது ட்விட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவை ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ரீ ட்விட் செய்துள்ளார்.
குறித்த காணொளியை இதுவரை 3.4மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன் மூலம் இலங்கையின் புகழ் பெற்ற சுற்றுலா தளமான அம்புலுவாவ கோபுரம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.