இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இடைக்கால நிர்வாகக் குழுவொன்றை அமைத்துள்ளது

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஐவரடங்கிய இடைக்கால நிர்வாகக் குழுவொன்றை அமைத்துள்ளது.

இக்குழுவில் இ.தொ.காவின் சிரேஷ்ட ஆலோசகர் முத்து சிவலிங்கம், பொதுச்செயலாளர் அனுஷியா, உப தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளர் மருதபாண்டி ரமேஷ், சட்டத்தரணி மாரிமுத்து ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து ஏற்பட்டுள்ள தலைமைப் பதவிக்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்படும்வரை, இக்குழுவே முடிவுகளை எடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *