கொழும்பு காலி முகத்திடலுக்கு வந்த முதலை!
காலி முகத்திடல் கரையில் இருந்த முதலை ஒன்று இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக உள்ள புல்வெளிக்கு வந்துள்ளது.
இந்த முதலை பற்றிய தகவல் நேற்று முதலில் தெரிவிக்கப்பட்டது.
கடல் அலைகளுடன் முதலை கரைக்கு வருவதைக் காட்டும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த முதலை இன்று மதியம் கரைக்கு வந்துள்ளது.