இலங்கையில் மதுபானம் குடிப்பவர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையில் மதுபானசாலைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மதுபான போத்தல்களில் சில போலியான என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளனவா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக மதுவரித் திணைக்களம் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
மதுபான வர்க்கத்தின் தரம் உள்ளிட்ட விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக இந்த ஸ்டிக்கர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
எனினும் அவ்வாறான ஸ்டிக்கர்கள் போலியான வகையில் ஒட்டப்படுகின்றமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.