கொரோனா அறிகுறிகள் இருந்தால் 10 நாட்கள் தனிமையில் இருக்க பரிந்துரை!

கொரோனா அறிகுறி இருந்தால் 10 நாட்கள் தனிமையில் இருக்கவும், அறிகுறி இல்லாதவர்களுக்கு 5 நாள் போதும் என  உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டால், 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது. அறிகுறி இல்லாவிட்டால், 5 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க விரைவு ஆன்டிஜென் பரிசோதனை செய்யுமாறும் தெரிவித்துள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *