இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பாக இருக்குமாறு இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தேசிய பயிற்சி தாதியான புஷ்பா ரம்யானி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.