எதிர்வரும் 15 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே உள்ளது!

நாட்டில் எதிர்வரும் 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய முறையில் எரிபொருள் கொள்வனவு செய்யப்படாமை காரணமாகவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *