ஜே.வி.பி. எவருக்கும் ஆதரவு இல்லை!
அரசை அமைக்கும் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று ஜே.வி.பி. முடிவு செய்துள்ளது. அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையின் மூலம் பிரதமர் பதவியை யார் வகிப்பது என்று முடிவு செய்யலாம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஜே.வி.பிக்கு 6 ஆசனங்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.