எலிசபெத் மகாராணி இலங்கையில் தங்கியிருந்த பங்களா!
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் இலங்கைக்கு வந்த போது தங்கியிருந்த மின்னேரியாவில் உள்ள பங்களா தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது.
ராணி பங்களா என அழைக்கப்படும், வரலாற்று சிறப்பு மிக்க இக்கட்டடத்தை, சீரமைப்பு செய்து, பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, அதன் மூலம், அரசுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும் என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.