அமெரிக்க டொலர் கொள்முதல் விலை 300 ரூபாவாக குறைக்க முடிவு?
சர்வதேச நாணய நிதியம் (IMF), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக வங்கி ஆகியவற்றில் இருந்து நிதி வருவதால், ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 300 ரூபாவுக்கு குறைக்க முடியும் என தான் நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
“பணம் அனுப்புதல் மற்றும் நிதி உட்பாய்சல் அதிகரிப்பால் ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலையை சுமார் ரூ. 300 ஆக குறைக்க முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது ஒரு அமெரிக்க டொலரின் விலை ரூ. 367. 30 உள்ளது.