உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் என்பதை நிரூபித்து விட்டீர்கள் மஹேல புகழாரம்!
வங்கதேசத்திற்கு எதிரான “அற்புதமான ஃபைட் பேக்” வெற்றியின் விளைவாக, “உலகத் தரம் வாய்ந்த ஆட்டத்தை” வெளிப்படுத்தியதற்காக, இலங்கை கிரிக்கெட் வீரர்களை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன ட்விட்டரில் பாராட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய அணியின் இயக்குநருமான காலித் மஹ்மூத், இந்த இலங்கை அணியில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாததை சுட்டிக்காட்டி சர்ச்சசையை ஏற்படுத்தினார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மஹேல ஜெயவர்த்தன “இலங்கை பந்து வீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்கள் யார் என்பதை காட்ட வேண்டிய நேரம் இது” என கூறி நேற்று ட்வீட்டர் பதிவொன்றையிட்டிருந்தார்.