பயங்கரவாத விசாரணைப் பிரிவில் மாற்றம்!

பயங்கரவாத விசாரணைப் பிரிவு (ரி.ஐ.டி) இன்றிலிருந்து குற்ற விசாரணைப் பிரிவுக்குப் (சி.ஐ.டி.) பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

சேவையின் அவசியம் கருதி பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவு குற்ற விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் காணப்பட்ட நிலையில்,, பின்னர் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் அந்தப் பிரிவு அவரின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *