தாய்லாந்தில் கோட்டாவுக்கு வெளியே வர தடை!

தாய்லாந்து சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  ஹோட்டலை விட்டு வௌியில் நடமாட வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இப்போதைக்கு பாங்கொக் நகரின் மையப் பகுதியில் உள்ள  ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள கோட்டாபய மற்றும் அவரது மனைவிக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு தாய்லாந்து சீ.ஐ.டி மற்றும் விசேட பொலிஸ் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

எனினும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவருக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அவர் தாய்லாந்தின் புகெட்டில் தங்குவதற்காக ஆடம்பர மாளிகையொன்று ஏற்பாடு செய்யப்பட்ட போதும் காவலர்கள் தங்கும் வசதி மற்றும் ஏனைய வீடுகளில் இருந்து மறைவான தன்மை காணப்படாமையினால் அங்கு அவர் தங்க அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *