ஊழல் மற்றும் பணவீக்கம் காரணமாகவே கோட்டாபய தப்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது!

அமைதியின்மை காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரக நிர்வாகி சமந்தா பவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு நிலை குறித்து கருத்துரைத்துள்ள அவர், இலங்கை அரசாங்கம் வீழ்ச்சியடைந்த கடைசி அரசாங்கமாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் மற்றும் பணவீக்கத்தினால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, இலங்கையின் ஜனாதிபதி பதவிவிலகி தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அவர் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *