கோத்தபாய ராஜபக்சவை ஏற்ற மறுப்பு தெரிவித்து திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்?

மாலைதீவு வழியாக சிங்கப்பூர் நோக்கிச் சென்ற விமானம், ஜூலை 14 அன்று மாலே விமான நிலையத்தில் முன்னாள்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அழைத்துச் செல்ல மறுத்து, நடுவானில் இந்தியாவுக்குத் திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர்தர வட்டாரங்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் மாலைதீவு செல்வதற்காக புறப்பட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் இந்தியாவிற்கு  கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், அவரின்  மனைவியையும் அழைத்து வர விமானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், எனினும் அவர்கள் அதனை மறுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாலைதீவில் இருந்து முன்னாள் ஜனாதிபதியை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல மூன்று விமானங்கள் தயார் நிலையில் இருந்த போதிலும், பல்வேறு சர்வதேச அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதியை அழைத்துச் செல்ல அவர்கள் மறுத்ததாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *