உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவு செய்து செய்பவர்களுக்கு  எதிராக கடுமையான  நடவடிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  சமூக வலைத்தளங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  குற்றப்புலனாய்வு  திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவோர் தொடர்பில்  உன்னிப்பாக அவதானித்து வருவாதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில்    பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரையின் பிரகாரம் பொலிஸ் தலைமையகம் அவதானம்  செலுத்தி வருவதாக   பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ   தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூக வலைத்தளங்களில்  பதிவு செய்து செய்பவர்களுக்கு  எதிராக கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  போலி செய்திகளை பதிவு  செய்பவர்களுக்கு  எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு  பொலிஸ் தலைமையகம்  குற்றப் புலனாய்வு  திணைக்களத்திற்கு  அறிவுறுத்தல்  வழங்கியுள்ளதாக  பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ  மேலும்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *