எதிர்காலத்தில் ஏதாவது நல்லது நடக்குமாம் ஜனாதிபதி தெரிவிப்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதமர் ஒருவரின் கீழ் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என அந்த கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

69 இலட்சம் ஆணை இருந்தும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதமரின் கீழ் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் ஏதாவது நல்லது நடக்கும் எனவும், முன்னைய வகையிலான அரசாங்கத்தை எவ்வாறு அமைப்பது என்பதை நாம் கவனிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *