எரிபொருள் விநியோக திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம்!

தொழில்சார் போக்குவரத்து முச்சக்கர வண்டிகள், தனியார் பேருந்துகள், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகனங்கள், அலுவலக பணியாளர்கள் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் கொள்கலன் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களுக்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கோட்டா திட்டத்தின் கீழ் எரிபொருளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *