பொதுத்தேர்வில் 2 லட்சம் பேர் தோல்வி 34 மாணவர்கள் தற்கொலை!

ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது.

ஆந்திராவில் 13 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 6 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

கடந்த 3-ந் தேதி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தேர்வில் 70.70 சதவீத மாணவிகளும், 64.02 சதவீத மாணவர்களும் வெற்றி பெற்றனர். 4 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்.

இதில் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகள் விரக்தியடைந்து 34 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

10-வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 34 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தற்கொலை செய்து கொண்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆறுதல் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *