தூக்கி வளர்த்த பெரியம்மாவை திருமணத்திற்கு அழைக்காத விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவன் தனது திருமணத்திற்கு தங்களை கூப்பிடவில்லை என அவரின் பெரியம்மா வேதனையுடன் தெரிவித்துள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழ் திரையுலகில் பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

இவரும் பிரபல இயக்குனர் விக்னேஷ்  சிவனும் ஒருவரை ஒருவர் பல வருடங்களாக காதலித்து வந்தனர்

இந்நிலையில் கவர்களது திருமணம் சென்னையில்  திரைபிரபலங்கள் பலர் கலந்து கொள்ள மிகப்பிரமாண்டமாக நடந்தது.

இவர்களது திருமண விழாவில் தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இயக்குநர் மணிரத்தனம், ரஜினி, ஷாருக்கான், அட்லி, போனிகபூர் , கார்த்தி , விஜய், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இவ்வாறு சினிமா படை சூழ நடைபெற்ற இவர்களது கல்யாணத்தில் விக்னேஷ் சிவனின் நெருங்கிய உறவினரும் அவரை தூக்கி வளர்த்த பெரியம்மா தன்னை கல்யாணத்துக்கு அழைக்கவில்லை என மிகுந்த வருத்ததுடன் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது,

விக்னேஷின் அப்பாவின் அண்ணனின் மனைவி நான். அவன் சிறுவயதில் பள்ளி விடுமுறையின் போது எங்கள் வீட்டிற்கு அவரது அப்பா அழைத்து வருவார்.

அதன் பின்னர் இங்கு சில நாட்கள் தங்கிவிட்டு தான் போவர்கள்.

இந்த அளவிற்கு இருந்தும் அவர்கள் எங்களை கல்யாணத்திற்கு அழைப்பார்கள் என எதிர்பார்த்தோம்.

ஆனால் அது கனவாகவே போனது. சொல்லப்போனால் விக்னேஷ் சிவனை அவர்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய சொன்னதே நாங்கள் தான்.

ஆனால் அப்போதும் அவரும் நயன்தாராவும் மட்டும் சென்று அதை செய்தார்கள். எங்களை அப்போதும் அழைக்கவில்லை.

இதனையடுத்து திருமனதிற்கும் எந்த தகவலும் கொடுக்கவில்லை.

விக்னேஷ் சிவன் மனதில் ஈன்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

இருப்பினும் அவர்கள் இருவரும் திருமணத்திற்கு பின்னராவது விருந்துக்கு எங்கள் வீட்டுக்கு வந்தால் சந்தோசப்படுவோம் என வேதனையுடன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சயை ஏற்படுத்தி வருகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *