மக்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!

அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், அனைத்து பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளையும் பழிவாங்கல்களையும் நிறுத்தி அமைதியைப் பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில், பொருளாதார நெருக்கடி தீர்வுக்கு, அரசியலமைப்பின் ஆணைக்கு அமைய, பொது இணக்கப்பாட்டு ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *