சட்டத்தரணிகள் சங்கத்தின் யோசனைக்கு ஜனாதிபதி இணக்கம்?

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை போக்குவதற்கு உரிய பிரேரணைகள் அரசியலமைப்பின் பிரகாரம் பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபையுடன் இன்று (08) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *