நாளை கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம்!

கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பு நாளை பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, சகல கட்சிகளும் இணக்கம் தெரிவித்தால் பதவி விலகத் தயார் என ஜனாதிபதி சபாநாயகரிடம் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவ்வாறான இணக்கப்பாட்டுக்கு வரும் வகையில் நாளை இந்தக் கூட்டத்தை நடத்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *