பதவி காலம் முடியும் வரை பதவியில் இருப்பேன் இன்றைய கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு!
ஜனாதிபதி தலைமையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பு நிறைவடைந்தது. இந்த கூட்டத்தின்படி ,
*நாளை மாலையளவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு
* நாமல் , பெசில் , சமல் , சஷீந்திர அமைச்சுப் பதவிகளை ஏற்காதிருக்க முடிவு
* ஆட்சியை கொண்டுசெல்ல உதவ அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்காமலிருக்க தயார் என்று முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியிடம் உறுதி
* ‘ ஜனாதிபதி பதவிகாலம் முடியும்வரை பதவியில் இருப்பேன்’ .எதிர்க்கட்சியினரை புதிய ஆட்சி அமைக்க அழைத்தேன் – அவர்கள் முன்வரவில்லை – அதனால் புதிய அமைச்சரவை நியமிக்கப்படுமென’ ஜனாதிபதி தெரிவிப்பு