பாராளுமன்ற வளாகத்தில் “ஹொரு கோ கம”

பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொட்டகை ஒன்றை அமைத்துள்ளனர்.
அந்த இடத்தில் “ஹொரு கோ கம” என்ற வாசக அட்டைகள் வைக்கப்பட்டிருந்தன.
பல்கலைகழக மாணவர் சம்மேளனம் (IUSF) நேற்று பாராளுமன்ற நுழைவாயிலை மறித்து போராட்டம் ஒன்றை நடத்தியது.
இன்று காலையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் அங்கிருந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் நேற்று காலை முதல் பாராளுமன்றத்திற்கான பல பிரவேச வீதிகளையும் பொலிஸார் மூடினர்.
காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 28 நாட்கள் நிறைவடைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *