திடீரென பாராளுமன்றம் வந்த ஜனாதிபதிக்கு கூச்சலிட்டு எதிர்ப்பு!
நாடாளுமன்றம் சென்றார் ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிர்கட்சியினர் கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்ற அமர்வுகளை பார்வையிடுவதற்காக சபைக்கு இன்று வருகை தந்தார்.
தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பான இரண்டாம் நாள் நாடாளுமன்ற விவாதம் தற்போது இடம்பெற்று வருகின்றது.
ஜனாதிபதியின் வருகையின்போது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.