கொழும்பின் சில பகுதிகளில் 14 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (05) இரவு 8.00 மணி முதல் 14 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, சனிக்கிழமை இரவு 8.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10.00 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்குமென சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 07, 08, 10, 12, 13, 14, 15 (கறுவாத்தோட்டம், பொரளை, மருதானை, வாழைத்தோட்டம், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், மட்டக்குளி) ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த காலப் பகுதியில் கொழும்பு 02, 03, 11 (கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, புறக்கோட்டை) ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *