இறுதி ஊர்வலத்தில் 17 பேரை வரிசையாக சுட்டுக்கொன்ற கொடூரம்!

மிச்சோகன் மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டி கிரேசியா நகரில் ஒருவரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது அதில் பங்கேற்றிருந்தவர்களில் 17 பேரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற  கும்பல் ஒன்று, அவர்களை வரிசையாக நிற்க வைத்து சுட்டுக் கொன்றது. இந்த காட்சி வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதைக் கடத்தல் கும்பல்களுக்கிடையே நடைபெற்ற மோதலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெக்சிகோ அதிபர்  ஆண்ட்ரெஸ் மேனுவல் லோபஸ் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *