நாளை 7 1/2 மணிநேர மின்வெட்டு!

நாளை (மார்ச் 2) நாடளாவிய ரீதியில் ஏழரை மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இவ்வாறு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து பகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணி நேர மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.இதேவேளை, நாளைய தினத்திற்கான மின் வெட்டு நேர அட்டவணையை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு வௌியிட்டுள்ளது…

மின் வெட்டு அட்டவணைக்கு இங்கே அழுத்தவும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *