இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்த மனைவியை கொன்று சாப்பிட்ட கணவன்!

பிரேசிலைச் சேர்ந்த மௌரோ சம்பீட்ரி, முதல் மனைவியை இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்த, மனைவியை கொடூரமாக கொன்றதோடு, அவன் அவலது உடலை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்டு, சமைத்தும் சாப்பிட்டிருக்கிறான். எந்த ஆதாரமும் கிடைக்க கூடாது என்பதற்காக, தந்தூரி அடுப்பில் உடலை சமைத்து சாப்பிட்டிருக்கிறான்.

குற்றம் சாட்டப்பட்ட மௌரோ சம்பீட்ரி வேறு ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அவலை அடைய எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தா நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தடையாக இருந்த மனைவியை கொடூரமாக கொன்று, சாப்பிட்டு, மீண்டும் திருமணம் செய்து கொண்டார். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நிலையில், போலீசார் ஊடகளிடம் வழக்கு விபரங்களை தெரிவித்தனர்.

குற்றவாளி மௌரோ சம்பீட்ரி (Mauro Sampietri, 59) அவரது மனைவி Claudete Sampietri உடன் நீண்ட காலம் வழ்ந்த போதிலும், இடையில் ஏற்பட்ட காதலுக்கு அவர் தடையாக இருந்ததால் அவரைக் கொன்றார். இருப்பினும், மனைவி காணாமல் போனதை அடுத்து, பொலீஸார் வீட்டில் நடத்திய சோதனை மற்றும் விசாரனையில், வீட்டின் அருகே அவரது உடலின் சில எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டன, அதன் பிறகு மேலும் விசாரனை செய்து பொலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.

இந்த கொடூர கொலைச் செயலானது ஜனவரி 2017 ஆண்டு மௌரோவால் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சிறையில் இருந்து தப்பித்து சென்று, மீண்டும் திருமணம் செய்து கொண்டார். சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மீண்டும் பொலீஸில் பிடிப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *