பொம்மை போல மாற இளம்பெண் எடுத்த விபரீத ஆசை!
பார்பி பொம்மை போல மாற வேண்டும் என்பதற்காக இளம்பெண் ஒருவர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகில் அமெரிக்கா, ஜெர்மன், பிரிட்டிஸ், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் பெண்களை போன்ற செக்ஸ் பொம்மைகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்காக பெரும் தொகை செலவிட வேண்டி இருக்கும்.
இதையடுத்து இளம்பெண் ஒருவர் தன்னை பாம்பி பொம்மை போல மாற்றிக்கொண்டுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது. ஜெர்மனி நாட்டில் ஜெஸ்சி பன்னி என்ற பெண், சிறு வயது முதலே மேக்அப் போட்டுக்கொள்வதில் அதீத ஆர்வம் கொண்டவர்.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 18 வயதை கடந்த அவர் தன் பெற்றோரை பிரிந்து தனியாக ஆஸ்திரியாவிற்கு சென்றுவிட்டார். அங்கு தன்னை மேலும் செக்ஸியாகவும் அழகாகவும் மாற்ற எண்ணியுள்ளார்,.
இதற்காக முதல்கட்டமாக ஜெஸ்ஸி தனது மார்பகத்தை பெரிதாக்கி கொள்ளும் அறுவை சிகிச்சையை செய்தார். ஆனால் இது அவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை.
அதன் பின்னர் அவர் தன் உருவத்தை பிம்போ பார்பி டால் போல மாற்ற வேண்டும் என விரும்பினார். பார்பி டாலுக்கு பெரிய உதடு, பெரிய மார்பகம், பெரிய பின்புறம் என இருக்கும்.
அது போலவே தன்னை மாற்றிக்கொள்ள அவர் அடுத்தாக உதட்டை பெரிதாக்க இந்திய ரூபாய் மதிப்பில் ரூ6 லட்சம், பின்புறத்தை பெரிதாக்க ரூ1.5 லட்சம், நாடியை சீர்படுத்த ரூ2 லட்சம், இறுதியாக உதட்டை குறிப்பட்ட வடிவத்தில் வைக்க ரூ.2 லட்சம் என இதுவரை மொத்தம் ரூ.24 லட்சம் செலவு செய்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது அவர் செக்ஸ் படங்களில் வரும் பாம்பி பொம்மை போல தோற்றத்தில் இருக்கிறார். தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. இளம்பெண்ணின் விபரீத ஆசையும் அதற்கு அவர் செய்த செலவும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.