இலங்கையில் கொரோனா மரணங்கள் 16 ஆயிரத்தை கடந்தது!
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
20 ஆண்களும் 10 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,024 ஆக அதிகரித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 24 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 06 பேரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.