காயப்பட்டால் பிளாஸ்டருடன் வருமாறு அறிவிப்பு!
இலங்கை அரச வைத்தியசாலை ஒன்றில் விடுக்கப்பட்ட அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காயங்களுக்கு மருந்து போடுவதற்காக வரும் நோயாளிகள் வெளியிலிருந்து பிளாஸ்டர்களை கொண்டு வருமாறு குறித்த வைத்தியசாலையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அறிவிப்புகள் வெளிநோயாளர் பிரிவில் காட்சிக்கு ஒட்டப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் ப்ளாஸ்டர் இல்லாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.