இப்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை ராஜபக்ச தெரிவிப்பு!
இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானத்தை மீளப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் இலங்கை கிரிக்கெட் சபைக்கு வழங்கிய இராஜினாமா கடிதத்தை மீளப் பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் முகாமையாளர் மொஹான் டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான T20I போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகிய 30 வயதான பானுக்க ராஜபக்ஷ இலங்கை அணிக்காக 5 ஒருநாள் மற்றும் 18 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார்.