அன்று மங்கள கூறியபோது கேலி செய்தோம் இன்று அதை‌ நாங்கள் செய்யப் போகிறோம்!

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்திய போது, தான் உட்பட அன்றைய எதிர்க்கட்சியினர் அதனை அவதூறுக்கும் கேலிக்கும் உட்படுத்தியதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் டளஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எரிபொருள் விலைகளுக்கு விலை சூத்திரம் ஒன்று அவசியம் என தற்போதைய எரிசக்தி அமைச்சர் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவது குறித்து அடுத்து நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாட உள்ளதாகவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் எரிபொருளின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *