கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 49,154 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 9,59,700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,03,013 பேர் குணமடைந்தனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி உலக அளவில் நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்க்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 59 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 2,03,103 பேர் தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

  • கொரோனா தொற்றால் அதிக உயிர் இழப்பைச் சந்தித்து வரும் இத்தாலியில் 13 ஆயிரத்து 155 பேர் பலியாகி உள்ளனர். இங்கு, 1,10,574 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 16,847 பேர் சிகிச்சையில் குணமான நிலையில், நேற்று ஒரே நாளில் 1,118 பேர் குணமடைந்துள்ளனர்.

 * ஸ்பெயினில் 9,387 பேர் பலியாகி உள்ளனர். இங்கு, 104,118 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  • அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,110 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,15,300 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,049 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • சீனாவில் 3,312 பேர் பலியாகி உள்ளனர். 81  ஆயிரத்து 554 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • ஈரானில் 3,036 பேர் பலியாகி உள்ளனர். இங்கு 47 ஆயிரத்து 593 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • பிரான்சில் 4,032 பேர் பலியாகி உள்ளனர். 56 ஆயிரத்து 989 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். 9,444 பேர் சிகிச்சையில் குணமாகி உள்ளனர்.
  • இந்தியாவை பொருத்தவரை கொரோனா தாக்குதலுக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். 1,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 151 பேர் குணமடைந்துள்ளனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *