இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் பிரியாவிடை நிகழ்வில் சவுதி அரேபியா தூதுவர்!
இலங்கையில் இருந்து இன்று காலை (04.06.2023) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஹஜ் யாத்திகர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதல் ஹஜ் யாத்திரிகர்கள் குழுவிற்கு பிரியாவிடை நிகழ்வில் இலங்கைக்கான சவுதி தூதுவர் கெளரவ காலித் ஹமூத் அல்- கஹ்தானி அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் புத்ததாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இசட்.ஏ.எம்.பைசல், இலங்கை ஹஜ் கமிட்டியின் தலைவர் இப்ராஹிம் சாஹிப் அன்சார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.