இன்றும் நாளையும் அரை மணி நேர மின்வெட்டு!
இன்று பல பகுதிகளில் அரை மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாலை 6 மணி முதல் இரவு 9:30 மணி வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் இம் மின் வெட்டானது அமுல்படுத்தப்படவுள்ளது.
நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில், மின் கட்டமைப்பை இணைக்கும் வரை மின் விநியோகம் துண்டிக்கப்படுமென மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளரான சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
நாளைய தினமும் (14) மின் விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது