திருமணமான இளம் ஜோடிகள் வீட்டில் சடலங்களாக மீட்பு!

திருமணமான இளம் ஜோடிகளின் சடலம் வீட்டிலிருந்து மீற்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலங்கள் கொஸ்பேவ பொலிஸ் பிரிவின் பதுவந்துர பகுதியில் மீற்கப்பட்டுள்ளது.

28 வயதான மனைவியின் சடலம் படுக்கையறை மெத்தையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவருடைய தலையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.குறித்த பெண்ணின் தலையில் பெரிய காயம் ஏற்பட்டு, இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.

கணவனின் சடலம் வீட்டின் உட்பகுதியில் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டது.
மனைவியை அடித்து கொன்ற பின்னர் கணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *