பஹன்துடாவ நீர்வீழ்ச்சியில் ஆபாச படம் எடுத்த நபருக்கு கொரோனா!

பலங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சி அருகே ஆபாசமாக நடந்துகொண்ட இளைஞனும், யுவதியும் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவு வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில் குறித்த இளைஞனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதனால் அவர் தற்போது தனிமைப்படுத்தல் முகாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இருவரிடமும் விசாரணை நடைபெறுவதோடு விரைவில் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *