இலங்கையில் இன்றும் கொரோனா மரணங்கள் 200ஐ கடந்தது!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 215 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் குறித்த உயிரிழப்புகள் 31 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டவை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,400 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தொடர்ச்சியாக 23 ஆவது நாளாகவும் இன்று 100க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன