நடிகர் உதயநிதியை மிஞ்சிய மகன் இன்பநிதி!
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த Neroca FC என்ற புட்பால் அணியில் விளையாட முதலமைச்சரின் பேரன் இன்பன் உதயநிதி ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தியன் ஆயில் லீக் கால்பந்து தொடர் கடந்த வருடம் 2007-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது இந்நிலையில் 2020-2021 ஆம் ஆண்டுக்கான தொடரை கோகுலம் கேரளா அணி வெற்றிபெற்று அசத்தியுள்ளது .இந்நிலையில் என்ற கால்பந்து அணிக்கு தமிழகத்தில் இருந்து ஒரு முக்கியமான நபர் தேர்வாகியுள்ளார். அவர் தான் உதயநிதியின் மகன் இன்பநிதி ஆவார்.
இது தொடர்பாக நெரோகா எப்சி அணி தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்த தகவலை வெளியிட்டுள்ளது.நெரோகா அணியின் வீரர்கள் தேர்விற்கான ட்ரையல்ஸில் இன்பன் உதயநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்பன் உதயநிதி கால்பந்து விளையாட்டில் டிபெண்டராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.